Sunday 17 March 2013

Aayirathil Nan Oruvan - Iruvar ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர்

- 0 comments
படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மனோ
வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1997


ஆயிரத்தில் நான் ஒருவன் 
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால் 
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் 
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(
ஆயிரத்தில் நான் ஒருவன்)

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன் 
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன் 
உண்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால் 
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(
ஆயிரத்தில் நான் ஒருவன்)

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் 
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக 
அந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால் 
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

(
ஆயிரத்தில் நான் ஒருவன்)
[Continue reading...]

Koduthathellam Koduthaan - Padagotti கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி

- 7 comments
படம்: படகோட்டி
இசை: M.S. விசுவநாதன்
பாடியவர்:  T.M. சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1964

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!
படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் -
மனம்நிறைய இருளிருக்கும்!

எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -

வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!
[Continue reading...]

Monday 4 March 2013

EnUyire EnUyire EnAaruyire Lyrics - என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே - உயிரே

- 0 comments
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1998

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே

ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூடிடுவோம்
காதலர் கண்களே சூரியன் சந்திரன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்
(கண்கள் தாண்டி..)

என் உடல் பொருள் தந்தேன் சரன் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீ திவலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
(என்னுயிரே..)
 
[Continue reading...]

Sandhosa Kannere Lyrics Uyire - சந்தோஷக் கண்ணீரே உயிரே

- 0 comments
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான், அனுபாமா, ஃபெபி மணி, அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1998


இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை ஏலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
(
இரு பூக்கள்..)

கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தெடித் தேய்ந்தேனே 
மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே 
கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

(
கண்ணீரே..)

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பென் நெஞ்சே சிறைதானா சரிதானா
பெண் நெஞ்சில் மோகமும் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத் தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்
நம் காதல் அது போல் மீறும்
கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்
நம் காதல் அது போல் மீறும்
(
தேடித்..)

கண்ணீரே

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ

பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
மர்ம ராணி நில் நில் ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

(
கண்ணீரே..)

[Continue reading...]

Kannukku Mai Azhagu (Male) - கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

- 0 comments
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: உன்னி மேனன்
வெளியான வருடம்: 1993

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
(கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
(கண்ணுக்கு..)

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)
[Continue reading...]

Kannuku mai Azhagu (Female) - கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

- 0 comments
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: P.சுசீலா
வெளியான வருடம்: 1993




கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
(கண்ணுக்கு..)

ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பென்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
(கண்ணுக்கு..)
[Continue reading...]

Rojavai thaalatum thendral - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா

- 5 comments
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1982



ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)
[Continue reading...]
 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger