Thursday 28 February 2013

கம்பன் ஏமாந்தான் - Kamban Emandhaan - Nizhal Nijamagirathu

படம் :  நிழல் நிஜமாகிறது
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
வெளியான ஆண்டு : 1978



கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(
கம்பன்)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

(
கம்பன்)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

(
கம்பன்)

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger