Saturday 11 September 2021

paatukku patteduthu - பாட்டுக்குப் பாட்டெடுத்து

- 0 comments

 

படம்:  Padagotti  - படகோட்டி

இசைM.S.விஸ்வநாதன்

பாடியவர்:  டி. எம். செளந்தரராஜன்பி. சுசீலா

வரிகள்வாலி

வெளியான வருடம்: 1964

 


பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ

கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க

தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ

கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்

தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ

இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்

ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே

ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு

மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு

மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே


மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே

ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு

வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு

ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்

நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க

தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ

ஆண் & பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ

[Continue reading...]

Tharaimel Pirakavaithaan - தரை மேல் பிறக்க வைத்தான்

- 0 comments

 

படம்Padagotti  - படகோட்டி

இசைM.S.விஸ்வநாதன்

பாடியவர்:  T.M. சௌந்தரராஜன்

வரிகள்வாலி

வெளியான வருடம்: 1964

 


உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

[Continue reading...]
- 0 comments

 

படம்Padagotti  - படகோட்டி

இசைM.S.விஸ்வநாதன்

பாடியவர்:  T.M. சௌந்தரராஜன்பி. சுசீலா

வரிகள்வாலி

வெளியான வருடம்: 1964

 


தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன் (2)

கண்கள் படாமல்
கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை

நேரில் வராமல்
நெஞ்சைத் தராமல் ஆசை
விடுவதில்லை ஹோய்
ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்

இருவர்
ஒன்றானால் ஒருவர்
என்றானால் இளமை
முடிவதில்லை ஹோ
ஓ இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய் பொழுதும்
விடிவதில்லை

தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ


பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோ ஓஓ பித்தம்
தெளிவதில்லை

வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
வருத்தம் தெரிவதில்லை
ஹோய் வருத்தம்
தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்

பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் பாவை
முகமல்லவா ஹோ ஓஓ
பாவை முகமல்லவா

அழகிய
தோள்கள் பழகிய
நாட்கள் ஆயிரம்
சுகமல்லவா ஹோய்
ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்

ஆஹாஆஆ
ஆஹா ஹா
ஹாஹாஹா
ஓஓஓஓஓஓ
ஆஹா ஹா
ஹாஹாஹா

[Continue reading...]

Kumari Penin Ulathilae - குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

- 0 comments

படம்Enga Veettu Pillai (எங்க வீட்டுப் பிள்ளை)

இசைM.S.விஸ்வநாதன்

பாடியவர்:  T.M. சௌந்தரராஜன்பி. சுசீலா

வரிகள்வாலி

வெளியான வருடம்: 1965

 


குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்

இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது

அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்


[Continue reading...]
 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger